Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

தலைமை ஆசிரியரால் நீக்கப்பட்ட விதவைப் பெண்ணுக்கு மீண்டும் சமையலர் பணி வழங்கிய கலெக்டர்


பள்ளியில் சமையல் வேலை செய்து வந்த தலித் விதவை பெண்ணை பணி நீக்கம் செய்த தலைமை ஆசிரியரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்ததுடன், அந்த பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டார்.

பள்ளியில் சமையல் வேலை செய்து வந்த தலித் விதவை பெண்ணை பணி நீக்கம் செய்த தலைமை ஆசிரியரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்ததுடன், அந்த பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டார்.

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பதுரா கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த  ஊர்மிளா என்ற பெண் தன் கணவருடன் சேர்ந்து சமையல் பணி செய்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்துவிட்டார். இதனை காரணமாக வைத்து ஊர்மிளாவை பணியில் இருந்து நீக்கிய தலைமையாசிரியர், வேறு ஒருவருக்கு அந்த வேலையை கொடுத்துள்ளார். ஊர்மிளாவை மீண்டும் வேலையில் சேர்க்க லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்காத நிலையில், ஊர்மிளா பாட்னாவில் உள்ள மாவட்ட கலெக்டர் கன்வால் தனுஜை நேரில் சந்தித்து தனது நிலை குறித்து தெரிவித்துள்ளார். உடனே சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய கலெக்டர், அங்கு பதிவேடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததை அறிந்து தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், அந்த பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, ஊர்மிளா அந்தப் பள்ளியில் சமையல் வேலையை தொடங்கினார். அவர் சமைத்த உணவை மாவட்ட கலெக்டர், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஊர்மிளா மீண்டும் சமையல் வேலைக்கு வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலெக்டரின் உத்தரவையடுத்து பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.