June 9, 2017
மாநில அளவில் நீச்சல் போட்டியில் சாதனை படைக்கும் கோவையை சேர்ந்த மாணவி ஸ்ரீநிதி
கோவையை சேர்ந்த மாணவி ஸ்ரீநிதி, மாநில அளவில் நடைபெற்ற ப்ரிக் நீச்சல் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். சென்னையில் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் 100, 200, 400, 800, 1200 மீட்டர் பிரிவுகளில் தங்கப்பதக்கங்களை கைப்பற்றி அவர் அசத்தியுள்ளார். தேசிய அளவில் பதக்கம் பெறுவதே தனது லட்சியம் என தெரிவித்துள்ள ஸ்ரீநிதி, அதற்காக தேனியில் சிறப்பு பயிற்சி பெற திட்டமிட்டுள்ளார்.
மேலும், ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு தங்கம் பெற்று தருவதே தனது கனவு எனவும் அவர் கூறியுள்ளார். போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளது அவரது பெற்றோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வெல்லப் போவதாகவும் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் நீச்சல் போட்டியில் சாதனை படைக்கும் கோவையை சேர்ந்த மாணவி ஸ்ரீநிதி
Reviewed by Admin
on
June 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.